Skip to content
Home » About Us

About Us

எங்களைப்பற்றி:-

பரம்பரைப் பரம்பரையாக மானாவாரிப் பயிர் (வானம் பார்த்த பூமி) விவசாயக் குடும்ப பின்னணியில் இருந்து வந்து முதல் தலைமுறை தொழில்முனைவராக உருவெடுத்திருக்கிறோம். விவசாயமே உணவு உற்பத்திதான். அதன் நீட்சியாக மரச்செக்கு எண்ணெய் & மண்கட்டிய நாட்டு துவரம்பருப்பு உற்பத்தித் தொழிலில் இறங்கியுள்ளோம்.

பிராண்ட்:-

ஆண்டாள் “பத்தோடு பதினொன்று; அவற்றுள் ஆண்டாள் தனி என்று’ ஊர்போற்ற விளங்க வேண்டும் என்னும் நோக்கத்தில் 12/12/2018-ஆம் தேதி தொடங்கப்பட்டு தரத்திலும், சுவையிலும் தனித்தன்மையுடன் பயணித்து வருகிறது #ஆண்டாள்_மரச்செக்கு_எண்ணெய் சிறுதொழில் நிறுவனம். எண்ணெய் வித்துக்களை (வேர்க்கடலை, எள் & தேங்காய் கொப்பரை) வெயிலில் நன்கு உலர்த்தி வாகை மரச்செக்கில் ஆட்டி எண்ணெயை வெயிலில் காய வைத்து கசடுகளைத் தெளியவிட்டு சுகாதாரமான முறையில் சேமித்து பாட்டில்களில் நிரப்புகிறோம். எண்ணெயை வெயிலில் காயவைப்பதால் சிக்குவாடை வராது. குறைவான நாட்களுக்குள் கெட்டுப்போகாது ‘உயர்ந்த தரம் – உரிய விலை’ என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு `உற்பத்தி & விற்பனை’ ஆகியவற்றில் சீரிய கவனம் செலுத்துவதுடன், நம்மைச்சுற்றி உள்ளவர்களின் ஆரோக்கியம் மேம்பட நாமும் சிறியதொரு பங்களிப்பு செய்கிறோம் என்னும் மனத்திருப்தியுடன் செயல்படுகிறோம்.

சுய உறுதிமொழி

எங்களின் குழந்தைகளுக்கு ஒருபோதும் நஞ்சினை உணவாகக் கொடுக்க மாட்டோம். ஆண்டாள் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் எங்களின் குடும்பத்தினர்களே!

எங்களது தயாரிப்பு பொருட்கள்

*கடலை எண்ணெய்

*நல்லெண்ணெய்

*தேங்காய் எண்ணெய்

*மண்கட்டிய துவரம்பருப்பு

 

பிற விற்பனைப் பொருட்கள்:-

*ஏலக்காய்

*மிளகு

*பனங்கருப்பட்டி

*நாட்டுச்சர்க்கரை